*ஏலேய்! முத்தையா
நீ கட்டிவந்த பொட்டக்கழுத
பொட்டப்புள்ள ஈந்திருக்கா...
ஆண் வாரிசு வர்க்கமுன்னு
ஊரு உலகம் நம்மத்தான்
வாயர புகழ்ந்திருக்கு
கண்ணு கோடி வச்சிருக்கு!
*திருஷ்டி வச்சது போல்
பொட்டபுள்ள ஈந்து புட்டா
வலக்கால வக்கிமுன்னே
இடக்கால வச்ச மக!
*அவ வாந்தி எடுத்தப்போ
பேரப்புள்ள வந்ததேன்னு
நான் மயங்கி விழுந்தேனே...
புள்ள நல்லா வளரணுமின்னு
தெனந்தெனந்தான்
நெல்லுச்சோறு ஆக்கிவச்சேன்!!!
நெஞ்சுமேல அவன் மிதிக்க
ஒடம்ப கொஞ்சம் தேத்தி வச்சேன்!!!
சாரலோட வந்த மழை
இடியோட விட்டுடிச்சே...
விருட்சமுன்னு நெனச்சேனே
விசமாகப்போயிருச்சே...
செலவ இவ பெத்துப்போட
செலவு நான் செய்வேனா
*ஒங்கப்பன் சொத்துன்னு
ஒடிஞ்சுபோன நான் இருக்கேன்
ஒடியப்போர நீ இருக்க
ஒரு டம்ளர் பால் கொடுக்கும்
காளக்குட்டி ஈந்த சனியன்
கரவமாடு ஒன்னிருக்கு
*விறகு இல்லேன்னு
கதவா ஆன மரத்த
ரெண்டாம் முறையா வெட்டிவெட்டி
விறகெடுத்து அடுப்பெரிச்சேன்
கன்னம் வைக்கும் கஷ்டம் இல்லேன்னு
கள்ளனே வந்தாலும்
மவராசன் இட்டு வந்ததிலே
இங்க கொஞ்சம் விட்டு போனாதான் உண்டு
எத வித்து
உம்மகள நீ தொலப்ப
*வேண்டாம்டா வெறும்பயலே
தாய்ப்பாலு சொரக்குமுன்னே
கள்ளிப்பாலு ஊத்திருடா
பொழச்சாலும் பொழச்சுக்குவா
நெல்லு ரெண்டு கொழச்சு வாடா
குருத்து கொன்ன பாவத்தீய
பொதச்ச இடத்தோரம்
குருத்து ஒன்னு நட்டு வச்சு
தண்ணி ஊத்தி தணிச்சுக்கலாம்...
* * * * * *
சொன்னதெல்லாம் வார்த்தயில்ல
உசிரறுக்கும் வாளுன்னு
மயங்கி தெளிஞ்சு
தெளிஞ்சு மயங்கி
ஒரு தாய்மை துடிதுடித்தது
* * * * * *
*ஏண்டி மவளே இங்க வந்த...
என்னோட வயித்துகுள்ள
உன்ன குடி வச்சானே
குடிகார உங்கப்பன்
குடிகெடுக்க வந்தவன்னு
கொன்னு கொல்லையில போட
அடி எடுத்து வச்சிபுட்டான்
ஆத்தா சொல்லுக்கு
புடி கொடுத்து உட்டுபுட்டான்
*ஏண்டி மவளே இங்க வந்த...
பத்து மாசம் கூட
முழுசாக வாழாம
மூணு மாசம் முன்னாடி
முந்திகிட்டு வந்ததெல்லாம்
முணுமுணுக்க முயலும் போதே
முடங்கி நீ போறதுக்கா
அவசரமா வந்தவளே
ஆத்தா வலி புரிஞ்சு
அழுதுகிட்டே பொறந்தவளே
சீரழியும் கத கேட்டும்
புரியாம் சிரிப்பவளே
ஏண்டி மவளே இங்க வந்த
*கள்ளிக் குருத்தோரம்
லேசாக கருத்திருக்காம்
உரமாக ஓன் உசிரு
ஒப்படைக்க போராக
மறுபடியும் சொமந்தாலும்
மகராசி ஒனப்போல
மக எப்ப நான் சொமப்பேன்
கம்போட நிக்கும் போது
பாம்பு சீறி என்ன பண்ண...
அழுது வக்கிறேண்டி
ஒனக்காக சொரந்த பால
கண்ணீரா கக்கறேண்டி
அறுந்த தொப்புள்கொடி
ஓன் நினைவா வக்கிறேண்டி...
காதலெனப்படுவது...?
கண்கள் ரெண்டும் சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!
பார்வைகள் மோதிதீப்பொறி எழ
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!
Thursday, November 22, 2007
Monday, November 19, 2007
நெருப்பு பந்தம்
*பொறி
சின்ன பொறி
உலகை பயமுறுத்தும் மனிதனை
பயப்பட வைத்த பொறி!
*இரு கற்களுக்கு பிறந்தும்
கல்லின் தன்மை இல்லாத பொறி!
*மனித ஞானத்தின்
மானம் இந்த பொறி
அவன் அறிவு அணிந்த
ஆரம்ப ஆடை இந்த பொறி!
*உலகின் பரிணாம வளர்ச்சிகளில்
பரிமாணம் வளர்த்த பொறி
இது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து
அங்கம் கொழுத்த பொறி!
*தீபமாய் எழுந்து
பக்தியை அளிக்கும்
மதவெறி பிடித்து
தீயாய் எழுந்து
பக்தனை அழிக்கும்
*அக்னியாகி கடவுள் ஆகும்
ராத்திரி பொழுதின் கதிரவன் ஆகும்
*நெய்யைக் குடித்து
யாகம் ஆகும்
உயிரைக் குடித்து
பாவம் ஆகும்-இது
அனுமனின் வீரம்
அடுக்கிய தீ!
கண்ணகி கற்பை
மதுரையில் எங்கும்
பரப்பிய தீ!
நமக்கும் தீக்கும்
உலகில் ஒருவகை பந்தம் உண்டு
*நீ பிறந்தது தெரிந்து
தானும் பிறந்து
உன்னை அழைக்கும் ஆரத்தீ!
*நீ வளரும் போது
தானும் வளர்ந்து
தொட்டால் சுடும்-என
அறிவு வளர்க்கும் நெருப்பு!
*நித்தம் உனக்கு
உணவு தரும்
அடுப்பங்கரை அனல்!
*இளைஞனென்று
உனை கர்வம் கொள்ளச்செய்யும்
சிகரெட் சூடு!
*உனக்கு நரைத்தல்
நெருப்புக்கு இளைத்தல்
இரண்டும் நிகழ்வது
நிதர்சன உண்மை...
*உன் பக்தியில் உன்னிடம்
தணிவாய் எரியும் தீபம்
உனை பந்தியாய் போட்டு
அள்ளித்திண்ணும் கொள்ளி!
*தீயை நீ எரிப்பது எண்ணம்
உன்னை எரித்து
உன்கதை முடிப்பது
தீயின் திண்ணம்!!!
சின்ன பொறி
உலகை பயமுறுத்தும் மனிதனை
பயப்பட வைத்த பொறி!
*இரு கற்களுக்கு பிறந்தும்
கல்லின் தன்மை இல்லாத பொறி!
*மனித ஞானத்தின்
மானம் இந்த பொறி
அவன் அறிவு அணிந்த
ஆரம்ப ஆடை இந்த பொறி!
*உலகின் பரிணாம வளர்ச்சிகளில்
பரிமாணம் வளர்த்த பொறி
இது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து
அங்கம் கொழுத்த பொறி!
*தீபமாய் எழுந்து
பக்தியை அளிக்கும்
மதவெறி பிடித்து
தீயாய் எழுந்து
பக்தனை அழிக்கும்
*அக்னியாகி கடவுள் ஆகும்
ராத்திரி பொழுதின் கதிரவன் ஆகும்
*நெய்யைக் குடித்து
யாகம் ஆகும்
உயிரைக் குடித்து
பாவம் ஆகும்-இது
அனுமனின் வீரம்
அடுக்கிய தீ!
கண்ணகி கற்பை
மதுரையில் எங்கும்
பரப்பிய தீ!
நமக்கும் தீக்கும்
உலகில் ஒருவகை பந்தம் உண்டு
*நீ பிறந்தது தெரிந்து
தானும் பிறந்து
உன்னை அழைக்கும் ஆரத்தீ!
*நீ வளரும் போது
தானும் வளர்ந்து
தொட்டால் சுடும்-என
அறிவு வளர்க்கும் நெருப்பு!
*நித்தம் உனக்கு
உணவு தரும்
அடுப்பங்கரை அனல்!
*இளைஞனென்று
உனை கர்வம் கொள்ளச்செய்யும்
சிகரெட் சூடு!
*உனக்கு நரைத்தல்
நெருப்புக்கு இளைத்தல்
இரண்டும் நிகழ்வது
நிதர்சன உண்மை...
*உன் பக்தியில் உன்னிடம்
தணிவாய் எரியும் தீபம்
உனை பந்தியாய் போட்டு
அள்ளித்திண்ணும் கொள்ளி!
*தீயை நீ எரிப்பது எண்ணம்
உன்னை எரித்து
உன்கதை முடிப்பது
தீயின் திண்ணம்!!!
Sunday, November 18, 2007
அனுப்புனர்... பெறுநர்...
*ஓ அந்த விடுப்புகள்
கல்விக்கால உடுப்புகள்
என் முதல் கற்பனைத்துளிகள்
ஆம்
என் பொய்கள் தாங்கிய
ஒரு பக்க பெட்டகங்கள்
*தந்தையின் கையெழுத்தை
எனக்கு கற்றுக் கொடுத்ததுவும்
அவரிடம் என்னை மாட்டி விட்டதுவும்
இந்த விடுப்புதான்!
*மருத்துவரை அனுகியதேயில்லை
பெருமையாய் கூறும் பாட்டியை
பலமுறை சாகடிக்க வைத்ததும்
இந்த விடுப்புதான்!
*திருமணம் விரும்பா
அண்ணணுக்கு கல்யாண தேதி
கண்டெடுத்ததுவும்...
உள்ளூர் தாண்டா எனக்கு
வெளியூர் விசா
வாங்கி தந்ததுவும்...
வலிக்காத வயிருக்காய்
மருத்துவரை அணுக வைத்ததுவும்...
என் நடிப்பு ஆசையை
மேடைகளில்லாமல்
நிறைவேற்ற உதவியதும்...
இந்த விடுப்புதான்!
*நண்பனுக்காய் ஒரு நாள்
நேர தாமதத்தால் ஒரு நாள்
நாசமாய்ப்போன படத்திற்காய் ஒரு நாள்
மகிழ்ச்சிக்காய் ஒரு நாள்
மகிழ்ச்சி தந்த அலுப்பிற்காய் ஒரு நாள்
விடுப்பெடுத்த நாளின் பாடம் எழுத ஒரு நாள்
சும்மா ஒரு நாள்
என இத்தனை நாளுக்கும்
ஈடு கொடுத்ததுவும்
இந்த விடுப்புதான்!
இந்த விடுப்பு
இயக்குநர் தாளாளர்
முதலியோருக்கு என்னை
அறிமுகம் செய்த விடுப்பு!
நண்பர் வட்டாரம்
அதிகப்படுத்திய விடுப்பு!
என் தேர்வு முடிவை
அன்றைக்கே அறிவிக்கும்
இந்த விடுப்பு!
நான் படித்ததில்
இன்னும் மறக்காதவை
"அ ஆ"
"ABCD"
அப்புறம் இந்த "விடுப்பு"
ஆனாலும்
இந்த விடுப்புதான்
என் நல்ல பெயர் மாற்றியதும்...
அல்லவை எல்லாம்
நல்லவை என்றதும்...
நல்லவை எல்லாம்
அல்லவை என்றதும்...
என் பாதையிலிருந்த
பூக்கள் பிடுங்கி
முட்கள் நட்டதுவும்...
கல்வியின் நாட்டத்தை
போதையென பொய் சொல்லி
புதைகுழியில் தள்ளியதும்...
"கண் கெட்ட பின்னே"
பழமொழியின் அர்த்தம்
அறிய வைத்ததுவும்...
சக மாணவர் பார்த்து
ஏங்க வைத்ததுவும்...
எல்லாம் விதியென
சொல்ல வைத்ததுவும்...
இந்த விடுப்புதான்...
இதே விடுப்புதான்...
இப்படிக்கு
தங்கள் கீழ்பணிந்த
ஒரு தண்டச்சோறு
கல்விக்கால உடுப்புகள்
என் முதல் கற்பனைத்துளிகள்
ஆம்
என் பொய்கள் தாங்கிய
ஒரு பக்க பெட்டகங்கள்
*தந்தையின் கையெழுத்தை
எனக்கு கற்றுக் கொடுத்ததுவும்
அவரிடம் என்னை மாட்டி விட்டதுவும்
இந்த விடுப்புதான்!
*மருத்துவரை அனுகியதேயில்லை
பெருமையாய் கூறும் பாட்டியை
பலமுறை சாகடிக்க வைத்ததும்
இந்த விடுப்புதான்!
*திருமணம் விரும்பா
அண்ணணுக்கு கல்யாண தேதி
கண்டெடுத்ததுவும்...
உள்ளூர் தாண்டா எனக்கு
வெளியூர் விசா
வாங்கி தந்ததுவும்...
வலிக்காத வயிருக்காய்
மருத்துவரை அணுக வைத்ததுவும்...
என் நடிப்பு ஆசையை
மேடைகளில்லாமல்
நிறைவேற்ற உதவியதும்...
இந்த விடுப்புதான்!
*நண்பனுக்காய் ஒரு நாள்
நேர தாமதத்தால் ஒரு நாள்
நாசமாய்ப்போன படத்திற்காய் ஒரு நாள்
மகிழ்ச்சிக்காய் ஒரு நாள்
மகிழ்ச்சி தந்த அலுப்பிற்காய் ஒரு நாள்
விடுப்பெடுத்த நாளின் பாடம் எழுத ஒரு நாள்
சும்மா ஒரு நாள்
என இத்தனை நாளுக்கும்
ஈடு கொடுத்ததுவும்
இந்த விடுப்புதான்!
இந்த விடுப்பு
இயக்குநர் தாளாளர்
முதலியோருக்கு என்னை
அறிமுகம் செய்த விடுப்பு!
நண்பர் வட்டாரம்
அதிகப்படுத்திய விடுப்பு!
என் தேர்வு முடிவை
அன்றைக்கே அறிவிக்கும்
இந்த விடுப்பு!
நான் படித்ததில்
இன்னும் மறக்காதவை
"அ ஆ"
"ABCD"
அப்புறம் இந்த "விடுப்பு"
ஆனாலும்
இந்த விடுப்புதான்
என் நல்ல பெயர் மாற்றியதும்...
அல்லவை எல்லாம்
நல்லவை என்றதும்...
நல்லவை எல்லாம்
அல்லவை என்றதும்...
என் பாதையிலிருந்த
பூக்கள் பிடுங்கி
முட்கள் நட்டதுவும்...
கல்வியின் நாட்டத்தை
போதையென பொய் சொல்லி
புதைகுழியில் தள்ளியதும்...
"கண் கெட்ட பின்னே"
பழமொழியின் அர்த்தம்
அறிய வைத்ததுவும்...
சக மாணவர் பார்த்து
ஏங்க வைத்ததுவும்...
எல்லாம் விதியென
சொல்ல வைத்ததுவும்...
இந்த விடுப்புதான்...
இதே விடுப்புதான்...
இப்படிக்கு
தங்கள் கீழ்பணிந்த
ஒரு தண்டச்சோறு
Tuesday, November 13, 2007
வேலையில்லாத் திண்டாட்டம்
*நாங்கள் வேலை தேடுவதையே
வேலையாகக் கொண்டுள்ள
இருபத்தோராம் நூற்றாண்டின்
இணையற்ற இளைஞர்கள்
மக்கள் தொகையில்
பாதி எங்கள் தொகை
யார் இட்ட சாபமோ
வேலைக்கும் எங்களுக்கும்
ஏனோ ஓர் பகை
ஐ.நா தலையிட்டாலும்
தீராது இந்தப்பகை
*எங்கள் வாழ்வு
வேலை தேடும் படலத்தை
பெரும் பகுதியாகக் கொண்ட
இன்னொரு இதிகாசம்...
*இந்தியாவின்
எதிர்காலத்தூண்கள்
கட்டிடம் இன்றி
காற்றைத் தாங்கியபடி...
*காளையின்
கண்ணில் நிறைந்திருக்கும்
காதலியின் முகம் போல
எங்கள் கண்ணில்
"வேலை காலி இல்லை"...
*எங்கள்
தேடுதல் வேட்டையில்
மாய்வதென்னவோ
நாங்களேதான்...
*அடிமாடாய் ஆவதற்கும்
அருகதை அற்றவராய்
எங்கள் கண் வேலை தேட
வெய்யில் கண் பட்டுப்பட்டு
வெந்துபோன நாங்கள்தான்
மண் வாய்க்கு நேர்ந்து விட்ட
"தண்டச்சோறுகள்"!!!
*வேலைத்தேடும்
எங்களைத்தேடி
அமைப்பாய் செய்து
உறுப்பினர் அனைவரும்
ஒன்றாய்க்கூடி
அமைப்பிற்கொரு பெயர்
அழுதபடி வைத்தோம்
"தொலையாத
பொருளைத்தேடி
தொலைந்த கூட்டம்"
என்று...
* * * * * * * * * * *
இளைஞனே எழுந்திரு!
பட்ட அடிகள்
வலிக்கும் முன்னே
எழுந்திரு!
*அஸ்தமனித்த சூரியன்தான்
மீண்டும் உதயமாகிறது
*பகலில் கதிரால்
மறைக்கப்பட்டாலும்
இரவில் குளிர்தரும்
நிலவைப்போல
உன்னாலும் முடியும் எழுந்திரு...
*விதையாய் ஒருநாள் இருப்பதுதான்
விருட்சமென ஒருநாள் புகழ்பெறும்
நம்பிக்கை விதையை உன்னுள்
விதைத்தால்
அது
விருட்சமென வளர்வது நிச்சயம்...
*தேவையற்றதை அகற்றினால்
பாறைகூட சிலையாகும்
உன்னையே சிற்பியாக்கி
நீயே சிலையாகு...
*உழைக்கத் தெரிந்தவனுக்கு
எதுவும் தொழில்
இளைங்கனே எழுந்திரு...
*கொடியை பிடித்தபிடி
விடாததால்
அந்த குமரனின்
பெயரும் நிலைத்தது
கொள்கையை பிடித்தபிடி
விடாததால் காந்தியை
மகாத்மா என உலகம் உதைத்தது
பாரதி இளைஞனின்
கவிதை வரிகள்
விடுதலை வேள்வியை
மூட்ட வில்லையா?
ஆம்ஸ்ட்ராங் இளைஞன்
விண்வெளி சென்று
நிலவில் கல்லை
காட்டவில்லையா?
*தூணே! உனக்கேன்
கட்டிடத் துணை
வேலை தேடும்
வட்டம் தகர்த்து
சுயதொழில் உளியில்
உன்னை செதுக்கு
உன்னுள் தங்கும்
குருவியின் கூட்டம்
*கதிரோன் வரும்வரை
காத்திருக்க நீ மலரல்ல
முடக்கிய கரங்களை விரி
பூமியை திருப்பி
விடியலை செய்!!!
*கண்களின் கரைகளை
உடைப்பதை விடுத்து
தலையை உயர்த்தி
உலகம் நோக்கு
கால்களை நகர்த்து
ஆயிரம் வழிகள்
உன் காலடி சேரும்
சமூகமே!
சற்றே விலகிடு
அவன் எழப்போகிறான்!!!
வேலையாகக் கொண்டுள்ள
இருபத்தோராம் நூற்றாண்டின்
இணையற்ற இளைஞர்கள்
மக்கள் தொகையில்
பாதி எங்கள் தொகை
யார் இட்ட சாபமோ
வேலைக்கும் எங்களுக்கும்
ஏனோ ஓர் பகை
ஐ.நா தலையிட்டாலும்
தீராது இந்தப்பகை
*எங்கள் வாழ்வு
வேலை தேடும் படலத்தை
பெரும் பகுதியாகக் கொண்ட
இன்னொரு இதிகாசம்...
*இந்தியாவின்
எதிர்காலத்தூண்கள்
கட்டிடம் இன்றி
காற்றைத் தாங்கியபடி...
*காளையின்
கண்ணில் நிறைந்திருக்கும்
காதலியின் முகம் போல
எங்கள் கண்ணில்
"வேலை காலி இல்லை"...
*எங்கள்
தேடுதல் வேட்டையில்
மாய்வதென்னவோ
நாங்களேதான்...
*அடிமாடாய் ஆவதற்கும்
அருகதை அற்றவராய்
எங்கள் கண் வேலை தேட
வெய்யில் கண் பட்டுப்பட்டு
வெந்துபோன நாங்கள்தான்
மண் வாய்க்கு நேர்ந்து விட்ட
"தண்டச்சோறுகள்"!!!
*வேலைத்தேடும்
எங்களைத்தேடி
அமைப்பாய் செய்து
உறுப்பினர் அனைவரும்
ஒன்றாய்க்கூடி
அமைப்பிற்கொரு பெயர்
அழுதபடி வைத்தோம்
"தொலையாத
பொருளைத்தேடி
தொலைந்த கூட்டம்"
என்று...
* * * * * * * * * * *
இளைஞனே எழுந்திரு!
பட்ட அடிகள்
வலிக்கும் முன்னே
எழுந்திரு!
*அஸ்தமனித்த சூரியன்தான்
மீண்டும் உதயமாகிறது
*பகலில் கதிரால்
மறைக்கப்பட்டாலும்
இரவில் குளிர்தரும்
நிலவைப்போல
உன்னாலும் முடியும் எழுந்திரு...
*விதையாய் ஒருநாள் இருப்பதுதான்
விருட்சமென ஒருநாள் புகழ்பெறும்
நம்பிக்கை விதையை உன்னுள்
விதைத்தால்
அது
விருட்சமென வளர்வது நிச்சயம்...
*தேவையற்றதை அகற்றினால்
பாறைகூட சிலையாகும்
உன்னையே சிற்பியாக்கி
நீயே சிலையாகு...
*உழைக்கத் தெரிந்தவனுக்கு
எதுவும் தொழில்
இளைங்கனே எழுந்திரு...
*கொடியை பிடித்தபிடி
விடாததால்
அந்த குமரனின்
பெயரும் நிலைத்தது
கொள்கையை பிடித்தபிடி
விடாததால் காந்தியை
மகாத்மா என உலகம் உதைத்தது
பாரதி இளைஞனின்
கவிதை வரிகள்
விடுதலை வேள்வியை
மூட்ட வில்லையா?
ஆம்ஸ்ட்ராங் இளைஞன்
விண்வெளி சென்று
நிலவில் கல்லை
காட்டவில்லையா?
*தூணே! உனக்கேன்
கட்டிடத் துணை
வேலை தேடும்
வட்டம் தகர்த்து
சுயதொழில் உளியில்
உன்னை செதுக்கு
உன்னுள் தங்கும்
குருவியின் கூட்டம்
*கதிரோன் வரும்வரை
காத்திருக்க நீ மலரல்ல
முடக்கிய கரங்களை விரி
பூமியை திருப்பி
விடியலை செய்!!!
*கண்களின் கரைகளை
உடைப்பதை விடுத்து
தலையை உயர்த்தி
உலகம் நோக்கு
கால்களை நகர்த்து
ஆயிரம் வழிகள்
உன் காலடி சேரும்
சமூகமே!
சற்றே விலகிடு
அவன் எழப்போகிறான்!!!
இன்று இறந்த இறந்தகாலம்
Wednesday, October 31, 2007
60 வயதில் அனாதைக் குழந்தை
*ஏலேய் என் ராசா
நான் பெத்த மகராசா
உங்காத்தா உன்னத்தான்
பத்து மாசம் சொமந்திருக்கா
உங்கப்பன் நான் மட்டும்
பலவருஷம் சொமந்தேனே...
அப்பத்தான் கண்ணசர்வேன்
தொட்டிலிலே நீ அழுவ
ஓடி நான் வருவேன்
ஓன் அழுக நிறுத்திவப்பேன்...
இப்படியே பல இரவு
நித்திரய தொலச்சிருக்கேன்
அதுக்காக அழுததில்லை
நீ அழ நான் பொறுத்ததில்ல...
*தூக்கி நான் கொஞ்சயிலே
நெஞ்சுமேல நீ மிதிப்ப
பின்னாளில் மிதிப்பேன்னு
அடிக்கோடு போட்டுருக்க
அப்ப எனக்கு புரியலயே...
*பள்ளியிலே படிக்கனுன்னு
எங்கப்பன் சொத்த வித்தேன்
கல்லூரி நீ முடிக்க
என் சொத்த சேத்து வித்தேன்
முதுகெலும்பு ஒவ்வொன்னா
உதுத்து விழுந்தாழும்...
என் இடுப்ப எந்தலையே
தொடுமளவு வளஞ்சாழும்...
நீ நிமிரத்தானேன்னு
சலிக்காம நான் வளஞ்சேன்
தல இப்போ காலுகிட்ட
நீ இப்போ எனக்கு எட்ட...
*எம்புள்ள நல்ல புள்ள
மேல்படிப்பு முடிச்சபுள்ள
ஒசந்தவேல குடுதாயி
சாமிகிட்ட வேண்டிக்கிட்டேன்
பூ மேல நீ நடக்க
பூமிதியல் நான் செஞ்சேன்...
*ஆத்தா கண்தொறந்து
நல்ல வேல கெடச்சிருச்சி
மொத மாச சம்பளத்த
முந்திகிட்டு தருவேன்னு
மொகந்நோக காத்திருந்தேன்...
மருமக என் மகராசி
உன்கூட வந்து நின்னா
அவளுக்கு செலவுன்னு
கணக்கு நீ காட்டிபுட்ட...
முதலுங் கடைசியுமா
அப்பத்தான் காலத்தொட்ட...
செத்துப்போன என் மொகத்த
அடக்கஞ்செஞ்சு சிரிச்சி வச்சேன்
கல்யாணம் பண்ணி வச்சேன்...
*குடிவாழ வந்தமக
குடிகெடுக்க போறான்னு
தெரியாம செஞ்சுபுட்டேன்
தலகாணி மந்திரத்த ஓதி
அவ செஞ்ச யாகத்துக்கு
என்ன பலி கொடுத்துபுட்டா...
*இல்லமிது இல்லமின்னு
முதியோர் இல்லம் சேத்துபுட்ட
ஓவென்று நான் அழுதா
ஊர் உன்ன தூத்துமின்னு
ஒதுக்குபுறம் அழுதுவச்சேன்...
இல்லத்து ஐயாவே!
ஒனக்கு ஒரு விண்ணப்பம்
நான் செத்த பின்னாலே
கண்ண மட்டும் மூடிடாத
கொள்ளி வக்க வந்தபுள்ள
மொகத்த நான் பாக்க வேணும்...
நான் பெத்த மகராசா
உங்காத்தா உன்னத்தான்
பத்து மாசம் சொமந்திருக்கா
உங்கப்பன் நான் மட்டும்
பலவருஷம் சொமந்தேனே...
அப்பத்தான் கண்ணசர்வேன்
தொட்டிலிலே நீ அழுவ
ஓடி நான் வருவேன்
ஓன் அழுக நிறுத்திவப்பேன்...
இப்படியே பல இரவு
நித்திரய தொலச்சிருக்கேன்
அதுக்காக அழுததில்லை
நீ அழ நான் பொறுத்ததில்ல...
*தூக்கி நான் கொஞ்சயிலே
நெஞ்சுமேல நீ மிதிப்ப
பின்னாளில் மிதிப்பேன்னு
அடிக்கோடு போட்டுருக்க
அப்ப எனக்கு புரியலயே...
*பள்ளியிலே படிக்கனுன்னு
எங்கப்பன் சொத்த வித்தேன்
கல்லூரி நீ முடிக்க
என் சொத்த சேத்து வித்தேன்
முதுகெலும்பு ஒவ்வொன்னா
உதுத்து விழுந்தாழும்...
என் இடுப்ப எந்தலையே
தொடுமளவு வளஞ்சாழும்...
நீ நிமிரத்தானேன்னு
சலிக்காம நான் வளஞ்சேன்
தல இப்போ காலுகிட்ட
நீ இப்போ எனக்கு எட்ட...
*எம்புள்ள நல்ல புள்ள
மேல்படிப்பு முடிச்சபுள்ள
ஒசந்தவேல குடுதாயி
சாமிகிட்ட வேண்டிக்கிட்டேன்
பூ மேல நீ நடக்க
பூமிதியல் நான் செஞ்சேன்...
*ஆத்தா கண்தொறந்து
நல்ல வேல கெடச்சிருச்சி
மொத மாச சம்பளத்த
முந்திகிட்டு தருவேன்னு
மொகந்நோக காத்திருந்தேன்...
மருமக என் மகராசி
உன்கூட வந்து நின்னா
அவளுக்கு செலவுன்னு
கணக்கு நீ காட்டிபுட்ட...
முதலுங் கடைசியுமா
அப்பத்தான் காலத்தொட்ட...
செத்துப்போன என் மொகத்த
அடக்கஞ்செஞ்சு சிரிச்சி வச்சேன்
கல்யாணம் பண்ணி வச்சேன்...
*குடிவாழ வந்தமக
குடிகெடுக்க போறான்னு
தெரியாம செஞ்சுபுட்டேன்
தலகாணி மந்திரத்த ஓதி
அவ செஞ்ச யாகத்துக்கு
என்ன பலி கொடுத்துபுட்டா...
*இல்லமிது இல்லமின்னு
முதியோர் இல்லம் சேத்துபுட்ட
ஓவென்று நான் அழுதா
ஊர் உன்ன தூத்துமின்னு
ஒதுக்குபுறம் அழுதுவச்சேன்...
இல்லத்து ஐயாவே!
ஒனக்கு ஒரு விண்ணப்பம்
நான் செத்த பின்னாலே
கண்ண மட்டும் மூடிடாத
கொள்ளி வக்க வந்தபுள்ள
மொகத்த நான் பாக்க வேணும்...
நன்நெருப்பு
*மனிதராய் அன்றி
நெருப்பாய் வாழ்வது
உயர்வென்பேன் கண்டீர்!!!
நெருப்பு நெருப்பை கொல்வதில்லை
நெருப்பு நெருப்பை வெருப்பதில்லை
*தன் பலம் அன்றி
ஆயுதம் எதையும்
அது ஏற்பதில்லை...
*உணவுள்ளவரை உயிர் வளர்க்கும்
இல்லாவிடில் சவம் வளர்க்கும்
பிச்சைப்புகினும்...
நெருப்புக்கு பிடிக்காது
*எதிரியாய் இருந்தபோதும்
தண்ணீரை தாமாய்
அழிப்பது இல்லை
*சாகிறபோது
சாகிறோம் என்று
நெருப்பு அழுததாய் சான்றுகளில்லை...
நெருப்பாய் வாழ்வது
உயர்வென்பேன் கண்டீர்!!!
நெருப்பு நெருப்பை கொல்வதில்லை
நெருப்பு நெருப்பை வெருப்பதில்லை
*தன் பலம் அன்றி
ஆயுதம் எதையும்
அது ஏற்பதில்லை...
*உணவுள்ளவரை உயிர் வளர்க்கும்
இல்லாவிடில் சவம் வளர்க்கும்
பிச்சைப்புகினும்...
நெருப்புக்கு பிடிக்காது
*எதிரியாய் இருந்தபோதும்
தண்ணீரை தாமாய்
அழிப்பது இல்லை
*சாகிறபோது
சாகிறோம் என்று
நெருப்பு அழுததாய் சான்றுகளில்லை...
Tuesday, October 30, 2007
கவிஞனாக வேண்டுமா?
*உன் பார்வையின் நீளம் விரி!
*அறிமுகமற்றவனின் இறப்புக்கும்
அழுக கற்றுக்கொள்!
*துன்பமோ... இன்பமோ...
சுவர்க்கமோ... நரகமோ...
இன்னதோ... இன்னாதோ...
புலன்கள் இல்லாவிட்டாலும்
எல்லாம் அனுபவி!
*நூலைத் திரிக்கும் போது
நீ அறுந்து போ!
*மலர்கூட்டம் இருந்தாலும்
நீ மணக்க முயற்சி செய்!
*மூத்த கவிகளை துரோணராய் ஏற்று
நீயும் துரோணராய் இரு!
*குளிர் அறைக்குள்
வியர்க்க கற்றுக்கொள்!
*சராசரிக்கும் குறைவாகவே
இமைக்கப் பழகு!
*பனியை உடைக்கும்
கலையை கல்!
சூரியனை அடைகாக்கும்
அற்புதம் அறி!
அதீதத்தில் எளிமை சேர்!
எளிமையில் அதீதம் சேர்!
*இயற்கையோடு பேசும்
பரிபாடை கற்றுக் கொள்!
*வெள்ளை நிறமா நீ
சீக்கிரம் கருப்பாகு
பெரும்பாலான நற்கவிகள்
கருப்பு நிறம்தானாம்...
*இரவின் நூல்பிரித்து
விடியல் செய்!
விடியலின் கண்பிடுங்கி
இரவு செய்!
*நித்தம் கற்பமாகும்
பூமிக்கு பிரசவம் பார்!
*உன் படைப்புகளின்
முதல் ரசிகன்
முதல் விமர்சகன் நீயாயிரு!
*நினைவுகொள்
கம்பனின் முதல் படைப்பே
இராமாயணம் இல்லை!!!
*உன் கைகளுக்குள் வானம் அடக்கு
ஒரு பனித்துளிக்குள் நீயும் அடங்கு!
*உன் பேனாவின் பிரசவ வலியை
படிப்பவர் உணர எழுது!
*ஞானம் வேண்டுமா பாதிரியாகு
காமம் வேண்டுமா பாவியாகு
விடுதலை சொல்லில் பாரதியாகு
உன் பேனாவின் அரிதாரம்
அடிக்கடி மாற்று!!!
தாயாய்... சேயாய்...
மலையாய்... மடுவாய்...
உனக்கு நீயே நண்பனாய்...
உனக்கு நீயே எதிரியாய்...
எல்லாமாய் இரு
ஆனால் "நான் கவிஞன்" என்ற
நினைப்பு மட்டும்
ஒருபோதும் கொள்ளாதே!!!
*அறிமுகமற்றவனின் இறப்புக்கும்
அழுக கற்றுக்கொள்!
*துன்பமோ... இன்பமோ...
சுவர்க்கமோ... நரகமோ...
இன்னதோ... இன்னாதோ...
புலன்கள் இல்லாவிட்டாலும்
எல்லாம் அனுபவி!
*நூலைத் திரிக்கும் போது
நீ அறுந்து போ!
*மலர்கூட்டம் இருந்தாலும்
நீ மணக்க முயற்சி செய்!
*மூத்த கவிகளை துரோணராய் ஏற்று
நீயும் துரோணராய் இரு!
*குளிர் அறைக்குள்
வியர்க்க கற்றுக்கொள்!
*சராசரிக்கும் குறைவாகவே
இமைக்கப் பழகு!
*பனியை உடைக்கும்
கலையை கல்!
சூரியனை அடைகாக்கும்
அற்புதம் அறி!
அதீதத்தில் எளிமை சேர்!
எளிமையில் அதீதம் சேர்!
*இயற்கையோடு பேசும்
பரிபாடை கற்றுக் கொள்!
*வெள்ளை நிறமா நீ
சீக்கிரம் கருப்பாகு
பெரும்பாலான நற்கவிகள்
கருப்பு நிறம்தானாம்...
*இரவின் நூல்பிரித்து
விடியல் செய்!
விடியலின் கண்பிடுங்கி
இரவு செய்!
*நித்தம் கற்பமாகும்
பூமிக்கு பிரசவம் பார்!
*உன் படைப்புகளின்
முதல் ரசிகன்
முதல் விமர்சகன் நீயாயிரு!
*நினைவுகொள்
கம்பனின் முதல் படைப்பே
இராமாயணம் இல்லை!!!
*உன் கைகளுக்குள் வானம் அடக்கு
ஒரு பனித்துளிக்குள் நீயும் அடங்கு!
*உன் பேனாவின் பிரசவ வலியை
படிப்பவர் உணர எழுது!
*ஞானம் வேண்டுமா பாதிரியாகு
காமம் வேண்டுமா பாவியாகு
விடுதலை சொல்லில் பாரதியாகு
உன் பேனாவின் அரிதாரம்
அடிக்கடி மாற்று!!!
தாயாய்... சேயாய்...
மலையாய்... மடுவாய்...
உனக்கு நீயே நண்பனாய்...
உனக்கு நீயே எதிரியாய்...
எல்லாமாய் இரு
ஆனால் "நான் கவிஞன்" என்ற
நினைப்பு மட்டும்
ஒருபோதும் கொள்ளாதே!!!
Monday, October 22, 2007
உன்னிடம் பிடித்தது
*கொலுசு பதித்த
கெண்டைக்கால் தழும்பு
*பாலைவன மண்போலே
சரிந்து விழும் கூந்தலை
ஒதுக்கும் உன் சுட்டுவிரல்
*செவ்விதழின் சிறுவரிகள்
*சிரிக்கையிலே முகத்தில்
யாரும் வரையாமலே
வந்துவிழும் கோட்டோவியங்கள்
*நீ வியக்கும் போதெல்லாம்
வியக்க வைக்கும்
விரிந்த உன் கண்கள்
*வெளியில் தெரியாத
கழுத்து சங்கிலி
*உன்னை ரசிக்க உதவிய
உன் வனாந்திர மௌனங்கள்
*நீ எப்போதும் அடைகாக்கும்
உள்ளங்கை கைகுட்டை
*கரியநிறம் கொண்ட போதும்
இரண்டும் என்ன வானவில்லா
கேட்க சொல்லும் புருவங்கள்
*வானவிற்களின் நடுவே
ஒற்றை நிலா
அழகிய பொட்டு
*பேச்சினூடே இதழ்வழுக்கி
சிலசொற்கள் இடறிவிழ
தாவிப்பிடிக்க
இதழ்கடிக்கும் வெண்பற்கள்
*வருவதே தெரியமல்
கண நேர மின்னல் போல்
வந்துபோகும் உன் வெட்கம்
*அலைகள் போல் அடிக்கடி வந்தும்
கடிக்கப்படாத கட்டைவிரல் நகம்
*பிரிகிற போதெல்லாம்
என் தோள் தொட்டு அழைக்கும்
உன் 2ம் 3ம் பார்வைகள்
*பார்க்கும் கேட்கும் போதுகளிலெல்லாம்
பரவசம் தரும்
உன்னை சுட்டாத உன் பெயர்
*உனை பாடு பொருளாய் கொண்டதனால்
முதல் ரசிகனாக்கும்
என் கவிதை
*பெரும்ழை போல் அல்லாமல்
சிறு இலைவிளிம்பில் சொட்டுசொட்டாய்
வழிந்துவிழும் உன் காதல்
பிடிக்கும் உன்னிடம்.......
கெண்டைக்கால் தழும்பு
*பாலைவன மண்போலே
சரிந்து விழும் கூந்தலை
ஒதுக்கும் உன் சுட்டுவிரல்
*செவ்விதழின் சிறுவரிகள்
*சிரிக்கையிலே முகத்தில்
யாரும் வரையாமலே
வந்துவிழும் கோட்டோவியங்கள்
*நீ வியக்கும் போதெல்லாம்
வியக்க வைக்கும்
விரிந்த உன் கண்கள்
*வெளியில் தெரியாத
கழுத்து சங்கிலி
*உன்னை ரசிக்க உதவிய
உன் வனாந்திர மௌனங்கள்
*நீ எப்போதும் அடைகாக்கும்
உள்ளங்கை கைகுட்டை
*கரியநிறம் கொண்ட போதும்
இரண்டும் என்ன வானவில்லா
கேட்க சொல்லும் புருவங்கள்
*வானவிற்களின் நடுவே
ஒற்றை நிலா
அழகிய பொட்டு
*பேச்சினூடே இதழ்வழுக்கி
சிலசொற்கள் இடறிவிழ
தாவிப்பிடிக்க
இதழ்கடிக்கும் வெண்பற்கள்
*வருவதே தெரியமல்
கண நேர மின்னல் போல்
வந்துபோகும் உன் வெட்கம்
*அலைகள் போல் அடிக்கடி வந்தும்
கடிக்கப்படாத கட்டைவிரல் நகம்
*பிரிகிற போதெல்லாம்
என் தோள் தொட்டு அழைக்கும்
உன் 2ம் 3ம் பார்வைகள்
*பார்க்கும் கேட்கும் போதுகளிலெல்லாம்
பரவசம் தரும்
உன்னை சுட்டாத உன் பெயர்
*உனை பாடு பொருளாய் கொண்டதனால்
முதல் ரசிகனாக்கும்
என் கவிதை
*பெரும்ழை போல் அல்லாமல்
சிறு இலைவிளிம்பில் சொட்டுசொட்டாய்
வழிந்துவிழும் உன் காதல்
பிடிக்கும் உன்னிடம்.......
பயணசீட்டெதற்கு?
*நீண்ட ரயிலின்
ஒவ்வொரு சக்கரமும்
தடதடக்கிறது உன் பெயரை
*விட்டுவிலகும் மரங்களில்
நிலைக்கிறது உன் பிம்பம்
*உதடு நழுவும் வார்தைகளை
உள்ளிழுத்து போகிறது
சன்னலோர காற்று
*உருமாறும் வானம்
உருவகித்து போகிறது
உன் முகம் காட்டும் பாவங்களை
*திடீர் மழையில் வந்து தீண்டும் சாரல்கள்
தந்து போகும்
சின்ன உன் சீண்டல்களை
*உன் அருகாமையின்
நாழிகைகள் நகர மறுக்கும்
பனி இரவில்
*பணம் கொண்ட தோல் பையில்
கணக்கும் உன் புகைப்படம்
*கதறும் ரயில் சத்தம்
பிரதிபலிப்பதில்லை
முழுமையாய் என் மனதை
*உன் தொலைவை சொல்லிக்காட்டும்
தூரத்தில் வெள்ளை நிலா
*சலனங்கள் தருவதில்லை
தண்டவாளம் போல் நீயும்
*தடங்கள் பதிப்பதில்லை
ரயிலைப்போல் நானும்
*கண் தெரியா தூரத்தில்
மறைந்து கிடக்கிறது மர்மம்
*பயணசீட்டு ஏதுமின்றி
பயணிக்கிறது என்னோடு
என் காதல்!!!
ஒவ்வொரு சக்கரமும்
தடதடக்கிறது உன் பெயரை
*விட்டுவிலகும் மரங்களில்
நிலைக்கிறது உன் பிம்பம்
*உதடு நழுவும் வார்தைகளை
உள்ளிழுத்து போகிறது
சன்னலோர காற்று
*உருமாறும் வானம்
உருவகித்து போகிறது
உன் முகம் காட்டும் பாவங்களை
*திடீர் மழையில் வந்து தீண்டும் சாரல்கள்
தந்து போகும்
சின்ன உன் சீண்டல்களை
*உன் அருகாமையின்
நாழிகைகள் நகர மறுக்கும்
பனி இரவில்
*பணம் கொண்ட தோல் பையில்
கணக்கும் உன் புகைப்படம்
*கதறும் ரயில் சத்தம்
பிரதிபலிப்பதில்லை
முழுமையாய் என் மனதை
*உன் தொலைவை சொல்லிக்காட்டும்
தூரத்தில் வெள்ளை நிலா
*சலனங்கள் தருவதில்லை
தண்டவாளம் போல் நீயும்
*தடங்கள் பதிப்பதில்லை
ரயிலைப்போல் நானும்
*கண் தெரியா தூரத்தில்
மறைந்து கிடக்கிறது மர்மம்
*பயணசீட்டு ஏதுமின்றி
பயணிக்கிறது என்னோடு
என் காதல்!!!
Subscribe to:
Posts (Atom)