காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Monday, September 27, 2010

மாணவர்க்கு அரசியல் தேவையா?


அன்பர்களுக்கு வணக்கம்

என் கருத்து
மாணவர்களுக்கு அரசியல்  தேவை
ஏன் எனில் இன்றைய மாணவர்தாம் நாளைய தலைவர்கள்.
இன்றே விதைத்து நீர் ஊற்றி காத்தால் தான் நாளை விதைத்தவர்க்கு மட்டுமல்லாது எல்லோர்க்கும்
உண்ண கனி கிடைக்கும்.
அதுபோல் தம்மையே விதையாக்கி அரசியல் அறிவை மேம்படுத்தி வளர்ந்து நிற்கும் ஒருவரால்தான் ஒரு சமூகத்தை மேம்படுத்தும் தலைவனாக முடியும்.

ஆம் அரசியல் என்பது சமூக மேம்பாட்டிற்கான ஒரு களம்.

சமூக மேம்பாடு என்பது என்ன?

தன் தேவைகளுக்காக ஒரு தனி மனிதன் வாடாதிருப்பதும், மற்றொருவரை நாடாதிருப்பதும் தான். அப்படி ஒரு நிலை உடனடியாக ஏற்பட இன்றைய சூழ்நிலை ஏதுவாக இல்லாதிருக்கலாம்.ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலைக்காக போராடுவதுதான் ஒரு தலைவனின் நிலையாக இருக்க வேண்டும். அதிலும் அந்த தலைவன் ஓர் அரசனாகவும் அதாவது அரசை ஆள்பவராகவும் இருந்தால்தான் அது சாத்தியமாகும். அதற்கு அவர் ஜனநாயக முறைப்படி தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள அரசியல் தான் சிறந்த களம்.


அத்தகைய சிறந்த களத்தில் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொல்வது சிறந்த ஒன்றே!!!

அரசியல் ஒரு சாக்கடை என்பது பொதுவாய் இன்றைய நடைமுறை.
இன்றைய நடைமுறை நிலை என்பதே அரசியல் நிலை ஆகிவிடாது.
அது இன்றைய அரசியல் தலைவர்களின் நிலை.
அதை மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் இன்றைய மாணவராம் நாளைய தலைவருக்கு நிச்சயம் உள்ளது.

தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யவும்

Wednesday, September 15, 2010

காதல் அறிகுறி


*காணுமிடமெல்லாம் காதல்  கடவுள்
கன்னி வடிவிலா

* தூக்கத்தில் மட்டும்
கனவு கண்டவன்
கவுகளில் தூங்குகிறாயா

*உன்
விரலுக்கும் பருவுக்கும்
இரத்தம் சிந்த
யுத்தம் நடக்கிறதா

*காலுக்கடியில்
கள்ளி இருந்தும்
ஒரு ரோஜாவை உன்னால்
ரசிக்கமுடிகிறதா

ஐயகோ ஆபத்து 

*படிப்பதர்க்காய்
புத்தகம்  எடுத்து
பக்கம் எண்ணுகிறாயா

*உச்சி வெய்யிலிலும்
உனக்குள் தொடர் மழையா

*உன் அழகு உருவத்தை
அடிக்கடி ரசிக்கிறாயா
 உன்னை அசிங்கமாய்
காட்டும் கண்ணாடியை
அடித்து ஓடிக்கிறாயா

ஐயகோ ஆபத்து 

கன்னியும் கண்ணிவெடியும் ஒன்று
காலை எடுத்துவிட்டால்
நரகத்தில் நீ மட்டும்
காலை இருத்திவிட்டால்  
நகரத்தில் அவளோடு...

(என் துரோணர் திரு. வைரமுத்து பாணியில் ஒரு முயற்சி)

Wednesday, September 8, 2010

காதல் காலம்


*சுகமுண்டு ஆயிரம்
காதலில் இங்கே

*தனிமையில் துணை வரும்
நினைவுகள் சுகம்
நினைவுகள் பகிரும்
நிமிடங்கள் சுகம்

*இருவருக்கிடையே
இடைவெளி சுகம்
இடைவெளி இல்லா
இறுக்கம் சுகம்

*நினைவுகள் தடுக்கி
விழுவது சுகம்
விளைவாய் வருகிற
விழுப்புண் சுகம்

*சிரிக்கும் போது
சிரிப்பது சுகம்-முகம்
மடியில் புதைத்து
அழுவது சுகம்

*அணைப்பில் அணைந்து
உறங்குதல் சுகம்
விரல் கேசம் கோத  
விழிப்பது சுகம்

*சினம் கொண்டு
திட்டுதல் சுகம்
திட்டுக்கள்  திரும்ப
வாங்கலும் சுகம்

*தனிமையில் புலம்பி
பேசுதல் சுகம்
இணைந்த பின் மௌனம்
இன்னும் சுகம்

*தெரிந்தும் காதல் சொல்ல
வேண்டுதல் சுகம்
வெட்கம் கூடி
சொல்வதும் சுகம்

*அடிக்கடி வருகிற
ஊடல் சுகம்
ஊடல் கடந்த
நாழிகை சுகம்

*காதல் மொழிகள்
பேசுதல் சுகம்
பேசச்சொல்லி கேட்டலும் சுகம்

*படைத்த கவிதைகள்
படிப்பது சுகம்- காதல் கரைத்த
கவிதைகள் புதிதாய்
படைப்பது சுகம்

*கடல்வெளி பரப்பில்
சிறுதுளி நீராய்

தொலைத்திட்ட காதலும் சுகம்

மனவெளி பரப்பில்
பசுமை மங்கா

காதல் காலமும் சுகம்...



         

ஆதலினால்....


*மின்னல் ஒரு கண்ணில்
அவள் பிம்பம் மறு கண்ணில்

*பூக்கள் ஒரு கண்ணில்
அதன் வாசம் மறு கண்ணில்

*வெளிச்சம் ஒரு கண்ணில்
கும்மிருட்டு மறு கண்ணில்

*பாலை ஒரு கண்ணில்
பெரும் மலையோ மறு கண்ணில்

*தேகம் ஒரு கண்ணில்
அதன் ஜீவன் மறு கண்ணில்

*தாகம் ஒரு கண்ணில்
நீர் சுனையோ  மறு கண்ணில்

*தெய்வம் ஒரு கண்ணில்
அதன் பக்தன்  மறு கண்ணில்

*தளிர்கள் ஒரு கண்ணில்
அதன் வேர்கள் மறு கண்ணில்

*புயலோ ஒரு கண்ணில்
பெரும் அமைதி மறு கண்ணில்

*கடலோ ஒரு கண்ணில்
அலைகள் மறு கண்ணில்

*பஞ்சம் ஒரு கண்ணில்
பெரும் பசுமை மறு கண்ணில்

*சிரிப்பு ஒரு கண்ணில்
நன்அழுகை மறு கண்ணில்

*ஜனனம் ஒரு கண்ணில்
மரணம் மறு கண்ணில்

*என் காதல் ஒரு கண்ணில்
அவள் காதல் மறு கண்ணில்

*இரட்டை பிறவி என் கண்கள்
இரண்டாய் ஆயின உன்னாலே....

காதல் தவம்


விழி இரண்டிலே எனைக்கலந்தேன்
உந்தன் உடலிலே உயிர் துறந்தேன்

கரிய கூந்தலிலே கரைந்து விட்டேன்
மலர் சூடும் பூவை உன் மனம் நுகர்ந்தேன்

வேரைப்போல் என் உடல் முழுதும்
சிறு கிளைகள் விட்டு நீ பரவி விட்டாய்

உந்தன் பார்வைதனை உந்தன் வார்த்தைதனை
எந்தன் வேருக்கு நீராக்கி
காதல் விதையை நீ விருட்சமாக்கினாய்

விருட்சம் மடிவது கடினம்
என் காதல் என்பதோர் புனிதம்

உன் இதழ் நுனியில்  என் உடல் வைத்தேன்
காதல் உயிர் தன்னை நீ கொடுத்தால்

உடலும் உயிருமாய் இரண்டறக்கலந்து
இறப்பு என்பதை மறந்திடுவோம்

புதிதாய் மறுமுறை பிறந்திடுவோம்  
 

Saturday, September 4, 2010

மழை

*திரிந்து போன தூரிகைகள்

* சின்ன சின்ன ஓவியங்கள்

*உலகத்தின் வெற்றிக்கு
விழுகின்ற எழுச்சிகள்

*விழுந்து தாங்கும்
விதையளவு விழுதுகள்

*காற்றின் மர்மம் தீண்டும்
இயற்கையின் விரல்கள்

*வானம் வீசும்
ஒற்றை எழுத்து
கவிதைகள்

*குருடரும் வாசிக்க‌
முடிந்த ஓசைக்காவியங்கள்

*சூரியன் நோக்கி பறந்த‌
நீர்ப்பறவைகள்

*அருவிகள் செய்யும்
ஆண்டவன் விரல்கள்

*கடலின் தொலைந்து போன‌
செல்வங்கள்

*மேகத்தின் கட்டவிழ்ந்த
கூந்தல்

* பூமியின் சுழற்ச்சிக்கு
ஆண்டவன் கண்டுபிடித்த‌
மூலிகைப் பெட்ரோல்

*கவிதை முடித்து வைக்க‌
ஏது வழி
மழைத்துளியே முற்றுப்புள்ளி
Related Posts with Thumbnails