காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Friday, August 27, 2010

முடிவில்லாத கதை

கதை கேட்டால் மகள்
ஒரு ஊர்ல ஒரு காடு இருந்துச்சாம்
காடுன்னா என்ன?
நெறயா மரம் இருந்தா அது காடு
எங்க அம்மாச்சி வீட்டுக்கு பின்னாடி
காடு இருக்கே
அதுல நான்,குட்டி, மக்கு,அப்பு எல்லாம் வெளாடுவோமே
அப்டியா? ம்... அந்த கட்டுக்குள்ள யானை, .....
அன்னைக்கி கோயில்ல பாத்தமே
பெரிய்ய காலு நீளமா கையி....
ஒனக்கு கத வேணுமா வேணாமா
வேணாம் போ....

சில பதில்களும் ஒரு பதிலும்

பூமிக்குள் என்ன இருக்கிறது?
நீர் என்றார் ஒருவர்
வேர் என்றார் ஒருவர்
கற்குழம்பு என்றார் ஒருவர்
மணல் அடுக்கு என்றார் மற்றொருவர்
இடைமறித்து  
மகள் சொன்னாள்
"பூமிக்குள்ள பூமி தான் இருக்கும்"
   

அமாவாசையும் பௌர்ணமி நிலவும்

மனக் குளத்தில் ஒரு கல்போல
இட்டு வைத்த உன் நினைவுகள் எல்லாம்
மேல் எழுந்து வருகின்றது
ஒரு அமாவாசை இரவில் ...
விடிவதற்குள் முழு நிலவாய்
வளர்ந்து விடுகின்றது
உன் வானில் தேய்ந்த என் காதல் !!!
Related Posts with Thumbnails