காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Monday, September 27, 2010

மாணவர்க்கு அரசியல் தேவையா?


அன்பர்களுக்கு வணக்கம்

என் கருத்து
மாணவர்களுக்கு அரசியல்  தேவை
ஏன் எனில் இன்றைய மாணவர்தாம் நாளைய தலைவர்கள்.
இன்றே விதைத்து நீர் ஊற்றி காத்தால் தான் நாளை விதைத்தவர்க்கு மட்டுமல்லாது எல்லோர்க்கும்
உண்ண கனி கிடைக்கும்.
அதுபோல் தம்மையே விதையாக்கி அரசியல் அறிவை மேம்படுத்தி வளர்ந்து நிற்கும் ஒருவரால்தான் ஒரு சமூகத்தை மேம்படுத்தும் தலைவனாக முடியும்.

ஆம் அரசியல் என்பது சமூக மேம்பாட்டிற்கான ஒரு களம்.

சமூக மேம்பாடு என்பது என்ன?

தன் தேவைகளுக்காக ஒரு தனி மனிதன் வாடாதிருப்பதும், மற்றொருவரை நாடாதிருப்பதும் தான். அப்படி ஒரு நிலை உடனடியாக ஏற்பட இன்றைய சூழ்நிலை ஏதுவாக இல்லாதிருக்கலாம்.ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலைக்காக போராடுவதுதான் ஒரு தலைவனின் நிலையாக இருக்க வேண்டும். அதிலும் அந்த தலைவன் ஓர் அரசனாகவும் அதாவது அரசை ஆள்பவராகவும் இருந்தால்தான் அது சாத்தியமாகும். அதற்கு அவர் ஜனநாயக முறைப்படி தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள அரசியல் தான் சிறந்த களம்.


அத்தகைய சிறந்த களத்தில் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொல்வது சிறந்த ஒன்றே!!!

அரசியல் ஒரு சாக்கடை என்பது பொதுவாய் இன்றைய நடைமுறை.
இன்றைய நடைமுறை நிலை என்பதே அரசியல் நிலை ஆகிவிடாது.
அது இன்றைய அரசியல் தலைவர்களின் நிலை.
அதை மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் இன்றைய மாணவராம் நாளைய தலைவருக்கு நிச்சயம் உள்ளது.

தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யவும்
Related Posts with Thumbnails