காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Saturday, August 21, 2010

மீண்டும் முதலிரவு



*மீண்டும் முதலிரவு

*அவன் ஒரு பிள்ளை பெற்றவன்
நான் ஒரு பிள்ளை கண்டவள்

*கண்டதுதான் கொண்டதுதான்
புதியதில்லை
அவனுக்கும் எனக்கும்

*எப்படியோ முடிந்து முடிவில்
முட்டி நிற்கிறோம் முதலிரவில்

*முதலிரவு முடிந்த கையில்
 அழுது நிற்பான் அருமை மகன்

இரவுக்கான கனவுகளை விட‌
பகலைக்கான கவலைகளை
கசிந்தன கண்கள்

*நல்லவனோ? மன்மதனோ? வேறெவனோ?
ஏது செய்ய எப்படி தொடங்க‌
என்ன பேச எதை மறைக்க‌
எதுவும் புரியா மந்த நிலை
மந்தகாசம் ஏதுமிலை

*இடை பிடிக்கின்றான்
எல்லோர் முன்னிலையிலும்
என் கரம் பிடித்தவன்

*"என்னை பிடித்திருக்கிறதா?"
இவனும் கேட்கிறான்
கட்டிலில் கட்டி பிடித்தபடி
"இல்லை" என்றால் என்ன செய்வான் :)
மௌனத்தை பதிலாய் தந்தேன்
அவன் இறுக்கம் இளகி விடாதபடி

*கன்னியமாய் பேசுகின்றான்
கவிதைமொழி வீசுகின்றான்
மயில் தோகையேன விரலெடுத்து
மேனியெல்லாம் கூசுகின்றான்
நாளை என் செய்வானோ?

*ஒழுகும் மூக்கு சிந்த‌
மகன் முந்தி இழுப்பானோ
அவசர தேவையென அறையிலிருந்து
தந்தை தந்தி அடிப்பானோ

*முத்த மொழி பேசும் இதழ்
நாளை கழுதை என்று
கொஞ்சிடுமோ

*இனியதென இனிக்கும் குணம்
நாளை கனல் இரும்பாகி சுட்டிடுமோ

*கன்னத்தில் தூரிகையாய்
வரையும் விரல்
நாளை வேகம் கூட்டி அறைந்திடுமோ

*இரவில் உறங்க விடாமல்
கனவுகள் தருபவன்‍ நாளை
போதையில் தடுமாறி
என் நடுநிசி கனவில்
இடறி விழுவானோ

*நான் சிரிக்க சிரிக்க பேசுபவன் நாளை
அழ அழ ஏசிடுவானோ

*எதற்கும்
30ம் 60 மாய் நாட்கள் செல்லட்டும்
பிறகு சொல்கிறேன்
இறுதியாய் உறுதியாய்
அவன் எப்படி இருக்கிறானென்றும்
நான் எப்படி இருந்தவளென்றும்...
Related Posts with Thumbnails