காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Sunday, May 11, 2008

அம்மா

*கேட்காமலே வரங்கள் தரும்
கண் தெரிந்த‌
தெய்வம் நீ...

*அருவாம் என்னை
கருவாக்கி உருவம் தந்தாய்...

*உன் பொன்மடி தொட்டிலில் தூங்கி
உன் கண்ணிரண்டில் எனை தாங்கி
ஒரு புள்ளி என்னை பிள்ளையாய் செய்த‌
புவி வாழும்பிரம்மன் நீ...

*விழுகிற போது விழுந்து
நான் எழுகிற போது தவழ்ந்து
என் நிழலையும் தாங்கி
உரு கொண்ட நிழலாய்
என்னோடு இருப்பவள் நீ...

*எங்கோ எதிலோ நானே
சிறு அடிகள் பட்டால்
உடனடி மருந்தாய்
இதழில் நீ வருவாய் அம்மா...

*தவறுகள் நிறைய புரிவேன்
அது தெரிந்தும் கூட‌
எனக்கென வாதம் புரியும்
என் வக்கீல் நீ...

*எங்கோ நான் உனை எண்ணி அழுதால்
உன் கண்கள் நீர் வடிக்கும்
என் காலில் முட்கள் தைத்தால்
உன் காலில் விழுப்புண் வரும்

*முத்த எச்சிலில் குளிப்பாட்டி
உன் சேலைத்துண்டிலே தலை துவட்டி
த‌லைவ‌லி வாட்டும் என‌ சொல்லி
உன் விர‌ல் சீப்பால் என் த‌லை சீவி
உட‌ன் ஊர்க‌ண் ப‌டுமென‌ உன் க‌ண் பிடுங்கி
திருஷ்டி தில‌க‌ம் இடுவாய் அம்மா...

*ந‌ண்ப‌க‌ல் வெயிலில் கூட‌
என் விழிக‌ள் காணும்
முழும‌தி நில‌வும் கூட‌
உன் முக‌ம்தான் அம்மா...

*ஆண்ட‌வ‌ன் ப‌டைப்பில் பொதுவாய்
ஒரு இத‌ய‌ம் தானே
என‌க்கென‌ வெளியில் துடிக்கும்
மறு இத‌ய‌ம் நீ...

*ப‌ஞ்ச‌னை மெத்தை எல்லாம் இருந்தும்
க‌ண் சேரா என் தூக்க‌ம்
எலும்புக‌ள் குத்தும்
உன் ம‌டி சேர்ந்தால்
உட‌னே என் விழி சேரும் அம்மா...

*புவிக்கென‌ அழுகும் ம‌ழை போல‌
உன் க‌ண்க‌ளும் என‌க்கென‌ அழுதிடுமே
புவிய‌து ம‌றுப‌டி அழுவ‌தில்லை
நான் அப்ப‌டி இருக்க‌ விரும்ப‌வில்லை
மறுபிற‌ப்பில் என் ம‌க‌ளாய் பிற‌ந்திடு
உனை என்றும் நான் சும‌ப்பேன்
உன‌க்கென்று காத்திருப்பேன் அம்மா...
Related Posts with Thumbnails