*அதிகம் பேசுவதில்லை மலர்கள்
இதழ் விரிந்த புன்னகையில்
கவனம் ஈர்க்கும்
பறிக்கும் ஆசையில்
பக்கம் வரும்போது
உதிர்ந்து விடுகிறது
உன்னைப்போலவே...
*உன் மௌனத்திற்கு
அர்த்தம் கொடுக்க முயலுகையில்
பேசிவிடுகிறாய்
உன் பேச்சுக்கு செவிசாய்க்கும் போது
மௌனமாகிறாய்.....
*சொட்டும் மழை இரவில்
மின்னல் தரும் நிமிடப்பகலில்
தெரிந்து மறைகிறது
உன் பொன்முகம்
மறக்க முயன்று
தோற்கும் தருணங்களில்
சிரிக்கிறாய் நீ இன்னும் அழகாய்
தோற்கும் முனைப்பில்
மறக்க முயல்கிறேன் மீண்டும் நான்...
*நிலவு என்றேன் உன்னை
என் வானம் என்பதற்காக
தேய்பிறை ஆகிறாய்
எப்போதும் நீ...
*கடின சூட்சமத்தை
கண்டு கொள்வாய் மிக எளிதாய்
நீட்டும் என் காதலை மட்டும்
கவிதை என்று கைதட்டுவாய்...
காதலெனப்படுவது...?
கண்கள் ரெண்டும் சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!
பார்வைகள் மோதிதீப்பொறி எழ
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!
Tuesday, May 13, 2008
Sunday, May 11, 2008
அம்மா
*கேட்காமலே வரங்கள் தரும்
கண் தெரிந்த
தெய்வம் நீ...
*அருவாம் என்னை
கருவாக்கி உருவம் தந்தாய்...
*உன் பொன்மடி தொட்டிலில் தூங்கி
உன் கண்ணிரண்டில் எனை தாங்கி
ஒரு புள்ளி என்னை பிள்ளையாய் செய்த
புவி வாழும்பிரம்மன் நீ...
*விழுகிற போது விழுந்து
நான் எழுகிற போது தவழ்ந்து
என் நிழலையும் தாங்கி
உரு கொண்ட நிழலாய்
என்னோடு இருப்பவள் நீ...
*எங்கோ எதிலோ நானே
சிறு அடிகள் பட்டால்
உடனடி மருந்தாய்
இதழில் நீ வருவாய் அம்மா...
*தவறுகள் நிறைய புரிவேன்
அது தெரிந்தும் கூட
எனக்கென வாதம் புரியும்
என் வக்கீல் நீ...
*எங்கோ நான் உனை எண்ணி அழுதால்
உன் கண்கள் நீர் வடிக்கும்
என் காலில் முட்கள் தைத்தால்
உன் காலில் விழுப்புண் வரும்
*முத்த எச்சிலில் குளிப்பாட்டி
உன் சேலைத்துண்டிலே தலை துவட்டி
தலைவலி வாட்டும் என சொல்லி
உன் விரல் சீப்பால் என் தலை சீவி
உடன் ஊர்கண் படுமென உன் கண் பிடுங்கி
திருஷ்டி திலகம் இடுவாய் அம்மா...
*நண்பகல் வெயிலில் கூட
என் விழிகள் காணும்
முழுமதி நிலவும் கூட
உன் முகம்தான் அம்மா...
*ஆண்டவன் படைப்பில் பொதுவாய்
ஒரு இதயம் தானே
எனக்கென வெளியில் துடிக்கும்
மறு இதயம் நீ...
*பஞ்சனை மெத்தை எல்லாம் இருந்தும்
கண் சேரா என் தூக்கம்
எலும்புகள் குத்தும்
உன் மடி சேர்ந்தால்
உடனே என் விழி சேரும் அம்மா...
*புவிக்கென அழுகும் மழை போல
உன் கண்களும் எனக்கென அழுதிடுமே
புவியது மறுபடி அழுவதில்லை
நான் அப்படி இருக்க விரும்பவில்லை
மறுபிறப்பில் என் மகளாய் பிறந்திடு
உனை என்றும் நான் சுமப்பேன்
உனக்கென்று காத்திருப்பேன் அம்மா...
கண் தெரிந்த
தெய்வம் நீ...
*அருவாம் என்னை
கருவாக்கி உருவம் தந்தாய்...
*உன் பொன்மடி தொட்டிலில் தூங்கி
உன் கண்ணிரண்டில் எனை தாங்கி
ஒரு புள்ளி என்னை பிள்ளையாய் செய்த
புவி வாழும்பிரம்மன் நீ...
*விழுகிற போது விழுந்து
நான் எழுகிற போது தவழ்ந்து
என் நிழலையும் தாங்கி
உரு கொண்ட நிழலாய்
என்னோடு இருப்பவள் நீ...
*எங்கோ எதிலோ நானே
சிறு அடிகள் பட்டால்
உடனடி மருந்தாய்
இதழில் நீ வருவாய் அம்மா...
*தவறுகள் நிறைய புரிவேன்
அது தெரிந்தும் கூட
எனக்கென வாதம் புரியும்
என் வக்கீல் நீ...
*எங்கோ நான் உனை எண்ணி அழுதால்
உன் கண்கள் நீர் வடிக்கும்
என் காலில் முட்கள் தைத்தால்
உன் காலில் விழுப்புண் வரும்
*முத்த எச்சிலில் குளிப்பாட்டி
உன் சேலைத்துண்டிலே தலை துவட்டி
தலைவலி வாட்டும் என சொல்லி
உன் விரல் சீப்பால் என் தலை சீவி
உடன் ஊர்கண் படுமென உன் கண் பிடுங்கி
திருஷ்டி திலகம் இடுவாய் அம்மா...
*நண்பகல் வெயிலில் கூட
என் விழிகள் காணும்
முழுமதி நிலவும் கூட
உன் முகம்தான் அம்மா...
*ஆண்டவன் படைப்பில் பொதுவாய்
ஒரு இதயம் தானே
எனக்கென வெளியில் துடிக்கும்
மறு இதயம் நீ...
*பஞ்சனை மெத்தை எல்லாம் இருந்தும்
கண் சேரா என் தூக்கம்
எலும்புகள் குத்தும்
உன் மடி சேர்ந்தால்
உடனே என் விழி சேரும் அம்மா...
*புவிக்கென அழுகும் மழை போல
உன் கண்களும் எனக்கென அழுதிடுமே
புவியது மறுபடி அழுவதில்லை
நான் அப்படி இருக்க விரும்பவில்லை
மறுபிறப்பில் என் மகளாய் பிறந்திடு
உனை என்றும் நான் சுமப்பேன்
உனக்கென்று காத்திருப்பேன் அம்மா...
Subscribe to:
Posts (Atom)