காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Tuesday, May 13, 2008

க‌ரை தொலைத்த‌ ந‌தி!!!

*அதிகம் பேசுவதில்லை மலர்கள்
இதழ் விரிந்த புன்னகையில்
கவனம் ஈர்க்கும்
பறிக்கும் ஆசையில்
பக்கம் வரும்போது
உதிர்ந்து விடுகிறது
உன்னைப்போலவே...

*உன் மௌனத்திற்கு
அர்த்தம் கொடுக்க முயலுகையில்
பேசிவிடுகிறாய்
உன் பேச்சுக்கு செவிசாய்க்கும் போது
மௌனமாகிறாய்.....

*சொட்டும் மழை இரவில்
மின்னல் தரும் நிமிடப்பகலில்
தெரிந்து மறைகிறது
உன் பொன்முகம்

மறக்க முயன்று
தோற்கும் தருணங்களில்
சிரிக்கிறாய் நீ இன்னும் அழகாய்
தோற்கும் முனைப்பில்
மறக்க முயல்கிறேன் மீண்டும் நான்...

*நிலவு என்றேன் உன்னை
என் வானம் என்பதற்காக‌
தேய்பிறை ஆகிறாய்
எப்போதும் நீ...

*கடின சூட்சமத்தை
கண்டு கொள்வாய் மிக எளிதாய்
நீட்டும் என் காதலை மட்டும்
கவிதை என்று கைதட்டுவாய்...

No comments:

Related Posts with Thumbnails