காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Wednesday, October 31, 2007

60 வயதில் அனாதைக் குழந்தை

*ஏலேய் என் ராசா
நான் பெத்த மகராசா

உங்காத்தா உன்னத்தான்
பத்து மாசம் சொமந்திருக்கா
உங்கப்பன் நான் மட்டும்
பலவருஷம் சொமந்தேனே...

அப்பத்தான் கண்ணசர்வேன்
தொட்டிலிலே நீ அழுவ‌
ஓடி நான் வருவேன்
ஓன் அழுக நிறுத்திவப்பேன்...

இப்படியே பல இரவு
நித்திரய தொலச்சிருக்கேன்
அதுக்காக அழுததில்லை
நீ அழ நான் பொறுத்ததில்ல...

*தூக்கி நான் கொஞ்சயிலே
நெஞ்சுமேல நீ மிதிப்ப‌
பின்னாளில் மிதிப்பேன்னு
அடிக்கோடு போட்டுருக்க‌
அப்ப எனக்கு புரியலயே...

*பள்ளியிலே படிக்கனுன்னு
எங்கப்பன் சொத்த வித்தேன்
கல்லூரி நீ முடிக்க‌
என் சொத்த சேத்து வித்தேன்

முதுகெலும்பு ஒவ்வொன்னா
உதுத்து விழுந்தாழும்...

என் இடுப்ப எந்தலையே
தொடுமளவு வளஞ்சாழும்...

நீ நிமிர‌த்தானேன்னு
ச‌லிக்காம நான் வ‌ள‌ஞ்சேன்

த‌ல‌ இப்போ காலுகிட்ட‌
நீ இப்போ என‌க்கு எட்ட‌...

*எம்புள்ள‌ ந‌ல்ல‌ புள்ள‌
மேல்ப‌டிப்பு முடிச்ச‌புள்ள‌
ஒச‌ந்த‌வேல‌ குடுதாயி
சாமிகிட்ட‌ வேண்டிக்கிட்டேன்
பூ மேல‌ நீ ந‌ட‌க்க
பூமிதிய‌ல் நான் செஞ்சேன்...

*ஆத்தா க‌ண்தொற‌ந்து
ந‌ல்ல‌ வேல‌ கெட‌ச்சிருச்சி
மொத‌ மாச‌ ச‌ம்ப‌ள‌த்த‌
முந்திகிட்டு த‌ருவேன்னு
மொக‌ந்நோக‌ காத்திருந்தேன்...

ம‌ரும‌க‌ என் ம‌க‌ராசி
உன்கூட‌ வ‌ந்து நின்னா
அவ‌ளுக்கு செல‌வுன்னு
க‌ண‌க்கு நீ காட்டிபுட்ட‌...
முத‌லுங் க‌டைசியுமா
அப்ப‌த்தான் கால‌த்தொட்ட‌...

செத்துப்போன‌ என் மொக‌த்த‌
அட‌க்க‌ஞ்செஞ்சு சிரிச்சி வ‌ச்சேன்
க‌ல்யாண‌ம் ப‌ண்ணி வ‌ச்சேன்...

*குடிவாழ‌ வ‌ந்த‌ம‌க‌
குடிகெடுக்க‌ போறான்னு
தெரியாம‌ செஞ்சுபுட்டேன்
த‌ல‌காணி ம‌ந்திர‌த்த‌ ஓதி
அவ‌ செஞ்ச‌ யாக‌த்துக்கு
என்ன‌ ப‌லி கொடுத்துபுட்டா...

*இல்ல‌மிது இல்ல‌மின்னு
முதியோர் இல்ல‌ம் சேத்துபுட்ட‌
ஓவென்று நான் அழுதா
ஊர் உன்ன‌ தூத்துமின்னு
ஒதுக்குபுற‌ம் அழுதுவ‌ச்சேன்...

இல்ல‌த்து ஐயாவே!
ஒன‌க்கு ஒரு விண்ண‌ப்ப‌ம்
நான் செத்த‌ பின்னாலே
க‌ண்ண‌ ம‌ட்டும் மூடிடாத‌
கொள்ளி வ‌க்க‌ வந்த‌புள்ள‌
மொக‌த்த‌ நான் பாக்க‌ வேணும்...

நன்நெருப்பு

*மனிதராய் அன்றி
நெருப்பாய் வாழ்வது
உயர்வென்பேன் கண்டீர்!!!

நெருப்பு நெருப்பை கொல்வதில்லை
நெருப்பு நெருப்பை வெருப்பதில்லை

*தன் பலம் அன்றி
ஆயுதம் எதையும்
அது ஏற்பதில்லை...

*உணவுள்ளவரை உயிர் வளர்க்கும்
இல்லாவிடில் சவம் வளர்க்கும்

பிச்சைப்புகினும்...

நெருப்புக்கு பிடிக்காது

*எதிரியாய் இருந்தபோதும்
தண்ணீரை தாமாய்
அழிப்பது இல்லை

*சாகிறபோது
சாகிறோம் என்று
நெருப்பு அழுததாய் சான்றுகளில்லை...
Related Posts with Thumbnails