காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Wednesday, October 31, 2007

நன்நெருப்பு

*மனிதராய் அன்றி
நெருப்பாய் வாழ்வது
உயர்வென்பேன் கண்டீர்!!!

நெருப்பு நெருப்பை கொல்வதில்லை
நெருப்பு நெருப்பை வெருப்பதில்லை

*தன் பலம் அன்றி
ஆயுதம் எதையும்
அது ஏற்பதில்லை...

*உணவுள்ளவரை உயிர் வளர்க்கும்
இல்லாவிடில் சவம் வளர்க்கும்

பிச்சைப்புகினும்...

நெருப்புக்கு பிடிக்காது

*எதிரியாய் இருந்தபோதும்
தண்ணீரை தாமாய்
அழிப்பது இல்லை

*சாகிறபோது
சாகிறோம் என்று
நெருப்பு அழுததாய் சான்றுகளில்லை...

No comments:

Related Posts with Thumbnails