காதலெனப்படுவது...?
கண்கள் ரெண்டும் சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!
பார்வைகள் மோதிதீப்பொறி எழ
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!
Wednesday, June 30, 2010
கண்கள் பேசும் கணங்கள்
* மூச்சுக்காற்றில் ஆடை விலகும்
* தொட்டால்சிணுங்கி ஆகும் உடல்
சினுங்கினும்...
விடாது விரல்கள் வேகம் கூட்டும்
உடலே பெய்து உடலே நனையும்
வியர்வை மழையில்
தகிக்கும் உடல்கள் தாகம் தீர்க்கும் ...
வியர்க்கா இதழை இதழ்கள் நனைக்கும்
சுவைகள் புதிதாய் நாவில் இனிக்கும்
* தடாகம் தொலைத்த
தரைமீன் போலே
இயல்பை மறந்து
இதயம் துடிக்க
நகக்கண் எல்லாம் கவிதை படிக்கும்
* உடலோடு மோதி இதழ்கள்
முத்த தாளம் போடும்
சிணுங்கி மெல்ல முனகி குரல்கள்
ஒத்திசைந்து பாடும்
வழியா? இன்பமா?
புரியாது போகும்
உள்ளங்கைக்குள் முடிந்து வைக்க - முனைந்து
முடிவில் முடியாது போகும்
* வழி மறந்த இதழ்கள் வந்து
காமன் கதைகள் கழுத்தில் சொல்லும்
கேட்காது ஆயினும்
கழுத்தும் கேட்கும்
* முடி இழுத்து வலி கொடுக்கும்
வழி கொடுத்து இடை துடிக்கும்
போதும் என்றே உடல் மடை உடைக்கும்
இறகென பறந்த உடல்
தரை இறங்கும்
* சேறு அடங்கிய நீராய்
அகம் தெளியும் - பிறகுதான்
தெளிவாய் அவரவர் முகம் தெரியும்
முன்னை தெரிந்த அழகில்
சின்ன குறை தெரியும் - ஆயினும் என்ன
அரைமணி போதும் குறை மறையும்
களங்கம் இல்லா பிறை தெரியும்!!!
Tuesday, June 22, 2010
நாளை ஒன்று நாளும் உண்டு
*குருவிகள் கட்டிய கூடு
குருவிக்கு சொந்தம் இல்லை
நாங்கள் கட்டிய கூடு
எங்கள் சொந்தம் இல்லையா
நாங்கள் என்ன குருவிகளா?
*கூடுவிட்டு கூடு கட்டி
கூடி வாழ குருவிகளால் ஆகும்
தாய் வீடு விட்டு நாடு நகர்ந்து
அலைச்சத்தமும் அழுகைசத்தமும்
மறந்து வாழ அகதிகளால் ஆகுமா?
*பதுங்கு குழியின் இரண்டு நாள் இருட்டில்
கவனம் கலையாத அன்னையின் சீலைப்போர்வை
தந்த பாதுகாப்பை...
ஒளிபுக முடியா நெருக்கத்தில்
சகோதரனின் வேர்வை தந்த குளிரை...
சிறுநீர் கழிக்க உயிரை பணயம் வைத்த
தகப்பனின் வருகைகேங்கும் மனதை...
காலை கட்டிலாக்கி
கால் மயிரை மெத்தையாக்கி
மேல் சட்டையை காற்றாடியாக்கி
மாமன் தந்த உறக்கத்தை ....
சிறு துளை கீற்று வெளிச்சத்தில்
எனக்கான பார்வைகள் தேக்கி
காத்திருந்த அவள் கண்களை...
மீட்டுத்தருமா போர்!!!
*நித்தம் நிகழும்
உயிர்பலிகளின் இலக்கங்களில்
பொய்கள் சொல்லி இலக்குகளை எட்டுவதாய்
எங்களை புறந்தள்ளி
போர்முனை மட்டும் போனது எங்கே???
*பதுங்கு குழி வாழ்வை மாற்ற
பலியாவதும் புலியாவதும்தான்
நாங்கள் உற்ற ஒற்றை வழி
பழி சொல்லும் நாடுகளுக்கு எங்கள்
வலி உணரும் புலன்கள் இல்லை...
*பங்கர் குண்டு, வெண்பாஸ்பரஸ் மழை,
கண்ணிவெடி, கொதுக்குண்டு, க்ளஸ்டர்
வெள்ளைவேனில் தொலைந்து போன ஆண்கள்
கொல்லைபுறத்தில் கற்பிழந்த பெண்கள்
இதை நித்தம் நீங்கள்
படித்து மறந்து போகிறீர்
இதில் நித்தம் நாங்கள்
இதயம் துடிக்க மறந்து வாழ்கிறோம்!!!
*குணம் பிளன்ர கொதபாய் - ஓர்
இனம் அளிக்க உரை கொண்டால்
சினை கொள்வோம் மீண்டும் மீண்டும்
சினம் கொள்வோம் யாண்டும் யாண்டும்
சிறை கொள்வோம்
இலங்கை சுற்றம் கரை கொள்வோம்
*பதைபதைத்து இறந்த உடல்
பதியுங்கள் குழி பறித்து
விதைபோல விழித்தெழுவோம்
பறைசாடி கதைத்திடுவோம்
இருள்வதால் முடியாது
இரவியின் கதை என்று...
Saturday, June 5, 2010
எழுதாத கவிதை
*காதல் தந்தது நீதான்
நான் பெற்றதுதான்
தெரியாதுனக்கு...
*களவு கற்றவள் போலே
இதயக்கன்னம் இட்டது நீதான்
உளவு கண்டு உரைத்திட்டேன்
எனக்குள் மட்டும்.
*உலை தொட்ட மெழுகாக
நிலை குழைந்தவன் நான்தான்
பிழை இங்கு என்னவெனில்
சிலையான நீதான்
உளையானாய் என நீ
அறியாமல் போனாய் !!!
*என்னை களவாடி சென்றவள் நீதான்
என் கடவுச்சொல் ஆனாய்!!!
*அழகான நதி போலே
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
கரையாக உன்னை நான்
தொடர்வதை அறியாமல் ...
*காதல் சொல்லாத என் நிலையை
சொல்லி நீ நகைக்கலாம்
படித்து நீ கிழிப்பதற்கு
எழுதப்படாமலேயே இருக்கட்டும்
என்
காதல் கவிதை...
Subscribe to:
Posts (Atom)