காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!
Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Saturday, June 5, 2010

எழுதாத கவிதை



*காதல் தந்தது நீதான்
நான் பெற்றதுதான்
தெரியாதுனக்கு...

*களவு கற்றவள் போலே
இதயக்கன்னம் இட்டது நீதான்
உளவு கண்டு உரைத்திட்டேன்
எனக்குள் மட்டும்.

*உலை தொட்ட மெழுகாக
நிலை குழைந்தவன் நான்தான்
பிழை இங்கு என்னவெனில்
சிலையான நீதான்
உளையானாய் என நீ
அறியாமல் போனாய் !!!

*என்னை களவாடி சென்றவள் நீதான்
என் கடவுச்சொல் ஆனாய்!!!

*அழகான நதி போலே
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
கரையாக உன்னை நான்
தொடர்வதை அறியாமல் ...

*காதல் சொல்லாத என் நிலையை
சொல்லி நீ நகைக்கலாம்
படித்து நீ கிழிப்பதற்கு
எழுதப்படாமலேயே இருக்கட்டும்
என்
காதல் கவிதை...
Related Posts with Thumbnails