காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Wednesday, September 8, 2010

ஆதலினால்....


*மின்னல் ஒரு கண்ணில்
அவள் பிம்பம் மறு கண்ணில்

*பூக்கள் ஒரு கண்ணில்
அதன் வாசம் மறு கண்ணில்

*வெளிச்சம் ஒரு கண்ணில்
கும்மிருட்டு மறு கண்ணில்

*பாலை ஒரு கண்ணில்
பெரும் மலையோ மறு கண்ணில்

*தேகம் ஒரு கண்ணில்
அதன் ஜீவன் மறு கண்ணில்

*தாகம் ஒரு கண்ணில்
நீர் சுனையோ  மறு கண்ணில்

*தெய்வம் ஒரு கண்ணில்
அதன் பக்தன்  மறு கண்ணில்

*தளிர்கள் ஒரு கண்ணில்
அதன் வேர்கள் மறு கண்ணில்

*புயலோ ஒரு கண்ணில்
பெரும் அமைதி மறு கண்ணில்

*கடலோ ஒரு கண்ணில்
அலைகள் மறு கண்ணில்

*பஞ்சம் ஒரு கண்ணில்
பெரும் பசுமை மறு கண்ணில்

*சிரிப்பு ஒரு கண்ணில்
நன்அழுகை மறு கண்ணில்

*ஜனனம் ஒரு கண்ணில்
மரணம் மறு கண்ணில்

*என் காதல் ஒரு கண்ணில்
அவள் காதல் மறு கண்ணில்

*இரட்டை பிறவி என் கண்கள்
இரண்டாய் ஆயின உன்னாலே....

No comments:

Related Posts with Thumbnails