காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Wednesday, September 8, 2010

காதல் தவம்


விழி இரண்டிலே எனைக்கலந்தேன்
உந்தன் உடலிலே உயிர் துறந்தேன்

கரிய கூந்தலிலே கரைந்து விட்டேன்
மலர் சூடும் பூவை உன் மனம் நுகர்ந்தேன்

வேரைப்போல் என் உடல் முழுதும்
சிறு கிளைகள் விட்டு நீ பரவி விட்டாய்

உந்தன் பார்வைதனை உந்தன் வார்த்தைதனை
எந்தன் வேருக்கு நீராக்கி
காதல் விதையை நீ விருட்சமாக்கினாய்

விருட்சம் மடிவது கடினம்
என் காதல் என்பதோர் புனிதம்

உன் இதழ் நுனியில்  என் உடல் வைத்தேன்
காதல் உயிர் தன்னை நீ கொடுத்தால்

உடலும் உயிருமாய் இரண்டறக்கலந்து
இறப்பு என்பதை மறந்திடுவோம்

புதிதாய் மறுமுறை பிறந்திடுவோம்  
 

No comments:

Related Posts with Thumbnails