காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Monday, October 22, 2007

பயணசீட்டெதற்கு?

*நீண்ட ரயிலின்
ஒவ்வொரு சக்கரமும்
தடதடக்கிறது உன் பெயரை

*விட்டுவிலகும் மரங்களில்
நிலைக்கிறது உன் பிம்பம்

*உதடு நழுவும் வார்தைகளை
உள்ளிழுத்து போகிறது
சன்னலோர காற்று

*உருமாறும் வானம்
உருவகித்து போகிறது
உன் முகம் காட்டும் பாவங்களை

*திடீர் மழையில் வந்து தீண்டும் சாரல்கள்
தந்து போகும்
சின்ன உன் சீண்டல்களை

*உன் அருகாமையின்
நாழிகைக‌ள் ந‌க‌ர‌ மறுக்கும்
ப‌னி இர‌வில்

*ப‌ண‌ம் கொண்ட‌ தோல் பையில்
க‌ண‌க்கும் உன் புகைப்ப‌ட‌ம்

*க‌த‌றும் ர‌யில் ச‌த்த‌ம்
பிர‌திப‌லிப்ப‌தில்லை
முழுமையாய் என் ம‌ன‌தை

*உன் தொலைவை சொல்லிக்காட்டும்
தூர‌த்தில் வெள்ளை நிலா

*ச‌ல‌ன‌ங்க‌ள் த‌ருவ‌தில்லை
த‌ண்ட‌வாள‌ம் போல் நீயும்
*த‌ட‌ங்க‌ள் ப‌திப்ப‌தில்லை
ர‌யிலைப்போல் நானும்

*கண் தெரியா தூர‌த்தில்
ம‌றைந்து கிட‌க்கிற‌து ம‌ர்மம்

*ப‌ய‌ண‌சீட்டு ஏதுமின்றி
ப‌ய‌ணிக்கிற‌து என்னோடு
என் காத‌ல்!!!

No comments:

Related Posts with Thumbnails