காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Monday, October 22, 2007

உன்னிடம் பிடித்தது

*கொலுசு பதித்த‌
கெண்டைக்கால் தழும்பு

*பாலைவன மண்போலே
சரிந்து விழும் கூந்தலை
ஒதுக்கும் உன் சுட்டுவிரல்

*செவ்விதழின் சிறுவரிகள்

*சிரிக்கையிலே முகத்தில்
யாரும் வரையாமலே
வந்துவிழும் கோட்டோவியங்கள்

*நீ வியக்கும் போதெல்லாம்
வியக்க வைக்கும்
விரிந்த உன் கண்கள்

*வெளியில் தெரியாத‌
கழுத்து சங்கிலி

*உன்னை ரசிக்க உதவிய‌
உன் வனாந்திர மௌனங்கள்

*நீ எப்போதும் அடைகாக்கும்
உள்ளங்கை கைகுட்டை

*கரியநிறம் கொண்ட போதும்
இர‌ண்டும் என்ன‌ வான‌வில்லா
கேட்க‌ சொல்லும் புருவ‌ங்க‌ள்

*வான‌விற்க‌ளின் ந‌டுவே
ஒற்றை நிலா‍‍‍‍‍‍‍‍‍‍‍
அழ‌கிய‌ பொட்டு

*பேச்சினூடே இத‌ழ்வ‌ழுக்கி
சில‌சொற்க‌ள் இட‌றிவிழ‌
தாவிப்பிடிக்க‌
இத‌ழ்க‌டிக்கும் வெண்ப‌ற்க‌ள்

*வ‌ருவ‌தே தெரிய‌ம‌ல்
க‌ண‌ நேர‌ மின்ன‌ல் போல்
வ‌ந்துபோகும் உன் வெட்க‌ம்

*அலைக‌ள் போல் அடிக்க‌டி வ‌ந்தும்
க‌டிக்க‌ப்ப‌டாத‌ க‌ட்டைவிர‌ல் ந‌க‌ம்

*பிரிகிற‌ போதெல்லாம்
என் தோள் தொட்டு அழைக்கும்
உன் 2ம் 3ம் பார்வைக‌ள்

*பார்க்கும் கேட்கும் போதுக‌ளிலெல்லாம்
ப‌ர‌வ‌ச‌ம் த‌ரும்
உன்னை சுட்டாத‌ உன் பெய‌ர்

*உனை பாடு பொருளாய் கொண்ட‌த‌னால்
முத‌ல் ர‌சிக‌னாக்கும்
என் க‌விதை

*பெரும்ழை போல் அல்லாம‌ல்
சிறு இலைவிளிம்பில் சொட்டுசொட்டாய்
வ‌ழிந்துவிழும் உன் காத‌ல்
பிடிக்கும் உன்னிட‌ம்.......

No comments:

Related Posts with Thumbnails