காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Wednesday, September 15, 2010

காதல் அறிகுறி


*காணுமிடமெல்லாம் காதல்  கடவுள்
கன்னி வடிவிலா

* தூக்கத்தில் மட்டும்
கனவு கண்டவன்
கவுகளில் தூங்குகிறாயா

*உன்
விரலுக்கும் பருவுக்கும்
இரத்தம் சிந்த
யுத்தம் நடக்கிறதா

*காலுக்கடியில்
கள்ளி இருந்தும்
ஒரு ரோஜாவை உன்னால்
ரசிக்கமுடிகிறதா

ஐயகோ ஆபத்து 

*படிப்பதர்க்காய்
புத்தகம்  எடுத்து
பக்கம் எண்ணுகிறாயா

*உச்சி வெய்யிலிலும்
உனக்குள் தொடர் மழையா

*உன் அழகு உருவத்தை
அடிக்கடி ரசிக்கிறாயா
 உன்னை அசிங்கமாய்
காட்டும் கண்ணாடியை
அடித்து ஓடிக்கிறாயா

ஐயகோ ஆபத்து 

கன்னியும் கண்ணிவெடியும் ஒன்று
காலை எடுத்துவிட்டால்
நரகத்தில் நீ மட்டும்
காலை இருத்திவிட்டால்  
நகரத்தில் அவளோடு...

(என் துரோணர் திரு. வைரமுத்து பாணியில் ஒரு முயற்சி)

1 comment:

Unknown said...

கவிதை அருமை!!

நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

Related Posts with Thumbnails