காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Sunday, March 30, 2008

இஷ்மாயிலின் மூக்குக்கண்ணாடி

* தூங்கும் உன் கைகள்
இல்லாமலே
களைகிறதென் நடுநிசி உறக்கம்

* இனி அதிகாலைத் தேனீர்
என்னை ம‌ட்டும்தான் எழுப்பும்

* எழுந்த பின்னும்
தொட‌ர்ந்து உற‌ங்க‌
அறையில் இனி ஆள் இல்லை

* அனாதை என
யாரும் எனை சுட்டியதில்லை
உன் மரணம் தவிர!!!

* அறையில் என்னுடன் பேச‌
அழைபேசி தவிர‌
யாருமில்லை இஷ்மாயில்...

* நகம் கடித்தல் பிடிக்காதெனக்கு
இப்போதெல்லாம்
கடித்துவிழும் என் கட்டைவிரல் நகம்
நகைக்கிறது அழகாய் உன்னைப்போலவே!

* கலைப்படுத்தியும் அழகு சேர்ப்பதாயில்லை
கலைத்துப்போடும் நீ இன்றி
அறையில் பொருட்கள்

* உள்ளிருக்கும் உன்னால்
தெளிக்கப்படாத நீரால்
பாலையாகி விட்ட‌து
குளிய‌ல‌றை வாச‌லில் த‌ரை

* நீ இற‌ந்து போனாயா
என‌க்குள் நீயாய் புதைந்து போனாயா
குழ‌ம்புகிறேன் இஷ்மாயில்...

* என்றுமே ம‌ற‌க்க‌ மாட்டாய்
ஆனால்‍‍‍‍‍‍ அன்று ம‌ட்டும்
நீ ம‌ற‌ந்த‌ உன் மூக்குக்க‌ண்ணாடி ‍
என்றுமே ம‌ற‌க்க‌ முடியாத‌ உன் நினைவுக‌ள்
இர‌ண்டினோடும்
இன்னமும் வாழ்கிறேன் நான்!

No comments:

Related Posts with Thumbnails